- மாவட்ட வருவாய்
- அதிகாரி
- சிறுவபுரி முருகன் கோயில்
- Periyapalayam
- வருவாய்
- சிறுவாபுரி
- முருகன் கோயில்
- பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
- திருவள்ளூர் மாவட்டம்
பெரியபாளையம், மார்ச் 4: சிறுவாபுரி முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
அண்மையில் இந்த கோயிலில் பெண் பக்தர் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட நிலையில் பக்தர்களுக்காக பாதுகாப்பு அம்சங்கள், வரிசையில் செல்வதற்கான ஏற்பாடு குறித்து கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர்.
The post சிறுவாபுரி முருகன் கோயிலில் மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.